கற்பாறைக்கு வெடி வைக்க முயன்ற இருவர் 150 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!
நவகமுவ - வெக்கவத்தை கற்குவாரியில் பணியாற்றிய இருவர், சுமார் 150 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தனர்.
இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கற்பாறைகளை வெடிவைத்து தகர்க்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர்கள் இருவரும் கீழே வீழ்ந்து உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யட்டியாந்தோட்டை மற்றும் கொரத்தொட பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 40 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்தனர்.