பசில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்

பசில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்

பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்கவிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.