நாடாளுமன்றத்தில் பசிலுக்கு முன்வரிசையில் ஆசனம்!
பசில் ராஜபக்ஷ நாளை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு முன்வரிசையில் 9 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்கவிருப்பதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.