நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கலந்துரையாடல்
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்தும் தினம் தொடர்பில் இன்று (05) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.