கண்டியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவம்: 4 பேர் விளக்கமறியலில்

கண்டியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவம்: 4 பேர் விளக்கமறியலில்

கண்டி - பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேயோட்டி ஒருவர் உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று (02) தெல்தெனிய நீதிவான நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.