ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

ஆட்பதிவு திணைக்களம், ஜூலை 5ஆம் திகதி முதல், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே, சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சேவையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர், 0115 226 126 அல்லது 0115 226 100 என்ற இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண காரியாலயத்தை 0242 227 201 என்ற இலக்கத்திற்கும், கிழக்கு மாகாண காரியாலயத்தை 0652 229 449 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும்.
தென் மாகாண காரியாலயத்தை 0912 228 348 என்ற இலக்கத்திற்கும், வடமேல் மாகாண காரியாலயத்தை 0372 224 337 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.