கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் - கலாநிதி அலங்கா சிங்

கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் - கலாநிதி அலங்கா சிங்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலங்கா சிங் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலங்கா சிங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று(01) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.