எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து பாதிப்புகளால் 200 கடல் வாழ் உயிரினங்கள் பலி

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து பாதிப்புகளால் 200 கடல் வாழ் உயிரினங்கள் பலி

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியமை மற்றும் மூழ்கியமையினால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.