மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தடை நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டது

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தடை நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டது

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைத், பஹிரான், ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்களுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

இதனை சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

நேற்றையதினம் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.