கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரிப்பு!

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நேற்று 19 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொவிட் மரண எண்ணிக்கையாக கருதப்படுகிறது.