யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ நியமனங்கள்
புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்குமான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (19-05-2026) ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
