நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.