கூரிய ஆயுதத்தால் குத்தி சகோதரனை கொலை செய்த சகோதரி

கூரிய ஆயுதத்தால் குத்தி சகோதரனை கொலை செய்த சகோதரி

தனிமைப்படுத்தப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலுள்ள வீடொன்றில் ஆணொருவர் சொந்த சகோதரியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதமொன்றால் அவரை சகோதரி குத்தி கொலை செய்துள்ளதாகவும் சம்பவத்தில் 31 வயதான ஒருவரே கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.