ஆய்வகக் குறைபாட்டை முன்னரே அறிந்திருந்ததாக ஒப்புக்கொண்ட நிலக்கரி பொது முகாமையாளர்
ட்ரைடென்ட் நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்புகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கட்டத்திலிருந்தே, அவற்றை ஆய்வு செய்த ஏற்றும் துறைமுக ஆய்வகத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கவில்லை என்பதை லங்கா நிலக்கரி நிறுவனம் அறிந்திருந்தது என அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் கோப் (COPE) குழு முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் இக்குழுவில் முன்னிலையாகவில்லை என்பதுடன், அவர் வேண்டுமென்றே இக்குழுவில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ளதாக அங்கே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், இக்கூட்டத்தின் போது கோப் குழுவின் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயற்படுவதாக எதிர்க்கட்சியினரால் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.