
சற்றுமுன்னர் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1908ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 526 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1371 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.