952 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

952 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 952 கிலோகிராம் மஞ்சளை கடத்திய குற்றச்சாட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் மற்றும் காவல் துறை குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மஞ்சள் தொகையானது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதென விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

52 வயதுடைய எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்ய்பபட்டுள்ளார்.