தரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு தனியார் கல்விநிலைய ஆசிரியரால் ஏற்பட்ட கொடுமை

தரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு தனியார் கல்விநிலைய ஆசிரியரால் ஏற்பட்ட கொடுமை

தரம் 01 இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் கைது யெ்யப்பட்டுள்ளார்.

வகுப்பு நேரத்தில் மாணவி ஒருவர் குறித்த ஆசிரியரால் துஷ்பிரயோகத்திகு உட்படுத்தப்பட்டார்.இது தொடர்பாக தனது பெற்றோருக்கு குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர் நேற்றையதினம் ஆசிரியரை அவரது கல்வி நிலையத்தில் சந்தித்து, அவரைத் தாக்கி, நாற்காலி ஒன்றில் கட்டி, ஒரு அறைக்குள் பூட்டியிருந்தனர்.

பின்னர் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபரின் மொபைல் தொலைபேசியை பரிசோதித்தவேளைசிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் வீடியோ காட்சிகளைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பெற்றோர் வலஸமுல்ல பொலிஜ்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவரை கைது செய்ததுடன் மருத்துவ பரிசோதனைக்காக வலஸமுல்ல வைத்தியசாலையிலும் அனுமதித்தனர்.

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்படுத்தப்பட்டார் எனத் தெரிவித்த நிலையில் அவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராசிக்காரர் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.