
இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை
பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடைய தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து நேற்று (புதன்கிழமை) இரவு படகொன்றின் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, அவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, பிஸ்டல் ஒன்று மற்றும் 3 இலட்சம் இந்திய ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.