கடலில் தவறி வீழ்ந்து முதியவர் பலி

கடலில் தவறி வீழ்ந்து முதியவர் பலி

பேருவளை நகருக்கு அருகிலுள்ள கடலில் தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சவம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபர் கடற்கரைக்கு சென்று பாறை ஒன்றின் மீது தனது பணப்பையை வைத்து விட்டு, இயற்கை கடனை கழிக்க முயற்சித்த போது கடலில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.