ஸ்ரீலங்காவில் கொரோனாவை விடவும் கொடிய நோய் -5 மாதங்களில் 22பேரை பலியெடுத்தது

ஸ்ரீலங்காவில் கொரோனாவை விடவும் கொடிய நோய் -5 மாதங்களில் 22பேரை பலியெடுத்தது

கடந்த 5 மாதங்களில் 22 பேர் டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளாதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் மழையுடனான வானிலையை அடுத்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 11 பேர்மட்டுமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.