கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைது
பிரபல பாதாள உலகத் தலைவனாக கருதப்படும் கஞ்சிபானை இம்ரானின் உதவியார்களில் ஒருவரான மொஹமட் பரூஸ் என்ற பாயிஸ் பிச்சி காவல்துறையிரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.