அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி

அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளன.

அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி | New Appointments In Government Cabinet Approval

முக்கிய அமைச்சுக்களின் விபரங்கள் வருமாறு,

பாதுகாப்பு அமைச்சு: 9,794

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு, 1,915

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு: 776

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு: 339

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு: 300

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் அபிவிருத்தி அமைச்சு: 214

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு: 67

மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு

மாகாண சபைகளிலும் கணிசமான அளவில் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன:

வட மாகாண சபை: 411

வடமேல் மாகாண சபை: 401

கிழக்கு மாகாண சபை: 282

சபரகமுவ மாகாண சபை: 236

ஊவா மாகாண சபை: 146

இந்தப் பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதுடன், அரச நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.