கண்டி-அனுரகம பகுதியில் நில அதிர்வு..?

கண்டி-அனுரகம பகுதியில் நில அதிர்வு..?

கண்டி-அனுரகம பகுதியில் நேற்று பிற்பகலில் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இப்பகுதியில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பிலான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டீ.சஜ்சன டி சில்வா தெரிவித்துள்ளார்.