வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளர் ஒருவரும், இன்னொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து ரூ.60 இலட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், முல்லைத்தீவு பிரதேச செய்தியாளரும் இன்னொருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.