எதிர்வரும் 10 நாட்களுக்குள் 5 மில்லியன் உதவித்தொகை! அரசாங்கம் உறுதி
டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ.5 மில்லியன் உதவித்தொகை ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பேரழிவு ஏற்பட்ட ஒரு மாதத்திற்குள் சேதமடைந்த சாலைகளில் 99% ஐ தனது அரசாங்கம் சரிசெய்ய முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடுகளை முற்றிலுமாக இழந்த மக்கள் ஒரு வருடத்திற்குள் சொந்த வீடுகளைக் கட்ட உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்களும் விவசாயிகளும் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இன்னும் சரியான இழப்பீடு கிடைக்கவில்லை என்று வெளிப்படையான கருத்துக்களும் குற்றங்களும் தற்போதும் காணப்படுகின்றன.

கடந்த பேரிடரின் போது குறிப்பாக பல குளங்கள் நிரம்பியதால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கு ரூ.25,000 இழப்பீடு கூட இன்னும் கிடைக்கவில்லை என்று சில கிராம மக்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.