பணியிலிருந்த ஊழியர் ரயிலில் மோதி பலி

பணியிலிருந்த ஊழியர் ரயிலில் மோதி பலி

மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி, யாகவெவ  பகுதியில் , கொழும்பு கோட்டையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணியிலிருந்த ஊழியர் ரயிலில் மோதி பலி | Employee On Duty Dies After Being Hit By Train

உயிரிழந்தவர் மதவாச்சி, யாகவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்தபோது, ​​சம்பந்தப்பட்ட நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக கேட் கீப்பராக பணியில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.