
மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது.
மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர் குறித்த நபர் தாயகம் வந்ததாஅக தெரியவருகின்றது.
இந்நிலையில் மயிலிட்டியில் தங்கியிருந்த போது படுக்கையில் உயிரிழந்த நிலையில் நேற்று (14) சடலமாக காணப்பட்டார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.