ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், கமேனிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாரிசு எவரும் இல்லாத நிலையில், அடுத்த உச்சத் தலைவர் யார் என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பு 88 சிரேஷ்ட மதத்தலைவர்களை கொண்ட “நிபுணர்கள் சபை” எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிற்கு உள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, குறித்த பதவிக்கு சாத்தியமான போட்டியாளர்களாக ஐவரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
உச்சத் தலைவர் கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா, அதிகார வட்டாரங்களில் முக்கிய செல்வாக்கு கொண்டவராகக் கருதப்படுகிறார். இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அதன் பசீஜ் தன்னார்வ படையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என அறியப்படுகிறார்.
இருப்பினும், தந்தையிடமிருந்து மகனுக்கு பதவி மாற்றம் என்பது ஷியா மதகுரு அமைப்பில் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. மேலும், அவர் உயர்நிலை மதகுருவாக இல்லாததும், ஆட்சியில் அதிகாரப்பூர்வ பதவி வகிக்காததும் அவருக்கு சவாலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.