
மந்தகதியில் வாக்களிப்பு - கவலை வெளியிட்டுள்ள கபே அமைப்பு
முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலின் இதுவரை காலப்பகுதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமானது முதல் இதுவரை 67 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
அவற்றில் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானவை.
திகாமடுல்ல மாவட்டத்தின் அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பகுதிகளில் 4 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலை கண்காணிக்க கபே அமைப்பின் சார்பில் 2200 கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.