காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்!

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில இடங்களில் இன்று (13)  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை,வதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! | Today S Weather Forecast 13 02 2025அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இதேவேளை பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, வதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! | Today S Weather Forecast 13 02 2025

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.