நாட்டில் மாறும் காலநிலை! வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் மாறும் காலநிலை! வெளியான முக்கிய அறிவிப்பு

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில இடங்களில் இன்று (12) இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டில் மாறும் காலநிலை! வெளியான முக்கிய அறிவிப்பு | Today S Weather Forecastஅத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மாறும் காலநிலை! வெளியான முக்கிய அறிவிப்பு | Today S Weather Forecast

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.