இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (01.10.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவு காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.