சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அநுர அரசின் நடவடிக்கை

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அநுர அரசின் நடவடிக்கை

 இலங்கைக்கு (Sri lanka) இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர்.

அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம் என்ற திட்டம் காக்கை தீவு - மட்டக்குளிய (Mattakkuliya) கடற்கரையில் இன்று (09) பிரதமர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் தலைமையிலான தேசிய திட்டமான தூய்மை  இலங்கை திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் அநுர அரசின் நடவடிக்கை | The Top 10 Beaches In Srilanka World

அதன்படி பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) தலைமையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

இந்த திட்டத்துடன் இணைந்து, மேல் மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கிய 124 இடங்களில் காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை இந்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது.