பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா

ரஷ்யாவின் வருடாந்திர பொருளாதார மன்றத்தின் இறுதி நாள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அந்நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் "முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை" நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, நகர ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தினார்.

376 உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கி அழிப்பு

மேலும், இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீட்டர்ஸ்பேபர்க் நகரில் 141 ட்ரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா | Ukrainian Drones Target St Petersburg

 

அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 376 உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த புடின்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று விளாடிமிர் புடின் மன்றத்தில் கூறிய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ரஷ்ய கடற்படையின் போல்டிக் கடற்படையின் முக்கிய புறக்காவல் நிலையமான க்ரோன்ஸ்டாட்டில் உள்ள "எதிரி கடற்படையின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஒரு தளத்தை" குறிவைத்து, தனது நாட்டின் ஆளில்லா விமானங்கள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் பகுதிக்கு 1,000 கி.மீ (620 மைல்கள்) தூரம் பயணித்ததாக அவர் கூறினார்.