Govpay திட்ட அறிமுக நிகழ்வு இன்று

Govpay திட்ட அறிமுக நிகழ்வு இன்று

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பூர்வாங்க நிகழ்வு இன்று (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

Govpay திட்ட அறிமுக நிகழ்வு இன்று | Govpay Project Launch Event Today

மேலும், வெளிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான (EBMD) வசதியளித்தல் என்பன நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.