வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடு ஆரம்பம்

வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடு ஆரம்பம்

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடு ஆரம்பம் | The Process Of Carrying The Ballot Boxes Has Begun

இன்று காலை 9 மணி முதல் மாவட்ட செயலகங்களிலிருந்து குறித்த வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

விசேட காவல்துறை பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.