இலங்கையில் பட்டப்பகலில் இடம்பெற்ற பகீர் சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!
காலி - அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (10-11-2024) முற்பகல் உரவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.