யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (19-10-2024) சுன்னாகம் சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! | Jaffna Chunnakam Area Sword Attack Person Injuredதனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வாள்வெட்டுக்கு இலக்கானவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.