சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு ரூ.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்து குவித்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த நிதியைப் பயன்படுத்தி தனது மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, வலஸ்முல்ல - கதிலமுல்ல பகுதியில் அமைந்துள்ள ரூ.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் நிலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பெப்ரவரி 19, 2026 முதல் ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.