கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி

கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் குடும்ப தகராறு இடம்பெறுவதாக நொச்சியாகம பொலிஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸார் வீட்டுக்குள் ஒருவர் மயங்கிக் கிடந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி | Wife Killed Her Husband In Nochchiyagama

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர், வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதுடைய இந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், அவ்வாறான நேரங்களில் அயலவர்களையும் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது

கணவனை கத்துவதனை தடுக்க அவரது வாயை துணியை திணித்ததால் அவர் மயக்கமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி | Wife Killed Her Husband In Nochchiyagama

உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவரது 42 வயது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.