கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் திலகா ஜயசுந்தர (Tilaka Jayasundara) தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Important Announcement From Ministry Of Educationஅடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பாடசாலைகளில் மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு முறையாக பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை அறிய கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Important Announcement From Ministry Of Education

மதிய உணவு திட்டத்திற்கு தேவையான அனைத்து பணமும் மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் வலயக் கல்வி அலுவலகங்கள், உணவு வழங்குனர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில், மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.