துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் பலி...!

துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் பலி...!

பெலியத்த-தம்முல்லை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 52 வயதான பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.