யாழில் கொடூர சம்பவம்... தந்தையின் தலையில் பயங்கரமாக தாக்கிய பிரபல ஆசிரியர்!

யாழில் கொடூர சம்பவம்... தந்தையின் தலையில் பயங்கரமாக தாக்கிய பிரபல ஆசிரியர்!

யாழ்ப்பாணம் -  தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலும் பொலிஸார் குறித்த இடத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.