திருமணத்திற்கு தயாராகி இருந்த யுவதி எடுத்த விபரீத முடிவு

திருமணத்திற்கு தயாராகி இருந்த யுவதி எடுத்த விபரீத முடிவு

கொழும்பில் (Colombo) உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்துள்ளதாக ரக்வான (Rakwana) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த (Kahawatta) - அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்று (16) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் தவறான முடிவெடுத்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருமணத்திற்கு தயாராகி இருந்த யுவதி எடுத்த விபரீத முடிவு | Kahavatta Young Nurse Death

உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லவிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பிரேத பரிசோதனை இன்று (17) வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.