தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் : காவல்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்த இளைஞர் : காவல்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

அங்குலான பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்குலான மயானத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் இன்று (15)  காலை உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

22 வயதுடைய சுபுன் ரந்திக எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது இளைஞர்  தகறாறு செய்தமை தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்குலான காவல் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நேற்றிரவு இளைஞனை அழைத்துச் சென்ற போது ​​குறித்த இளைஞர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்

இவ்வாறு காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து இரவு உணவு கொடுத்த பின் உறங்கச் செய்துள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை ஏழு மணி அளவில் இளைஞர் தொடருந்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக காவல் அதிகாரிகள் தமக்கு அறிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.