முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அந்த தொகை இரட்டிப்பாக தங்களது வங்கிக் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும் என்றும் மோசடிக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிகளளவு பணம் முதலீடு செய்யப்பட்டு நான்கு மடங்கு திரும்பக்கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டு இந்த மோசடி இடம்பெறுகின்றது.

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Money Fraud Through Facebook In Srilanka

நைஜீரியா போன்ற வெளிநாடுகள் ஊடாக இந்த பணமோசடி இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த மோசடியில் பலமான வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.