இலத்திரனியல் பயணச்சீட்டு முறைக்கு மாறும் பொதுப் போக்குவரத்து சேவைகள்!

இலத்திரனியல் பயணச்சீட்டு முறைக்கு மாறும் பொதுப் போக்குவரத்து சேவைகள்!

இந்த வருட இறுதிக்குள் தொடருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.