கொழும்பு மற்றும் பல பகுதிகளில் தொடரும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் தொடரும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் தொடரும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Today Weather Heavy Rains Continue Colombo Many

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் தொடரும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Today Weather Heavy Rains Continue Colombo Many

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.