கண்டியில் 24 வயது இளைஞரின் சடலம் மீட்பு.!

கண்டியில் 24 வயது இளைஞரின் சடலம் மீட்பு.!

கண்டி (Kandy) மாவட்டம், புஸ்ஸல்லாவை – பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரோடையொன்றிலிருந்து இன்று (21.04.2024) காலை பிரதேச மக்களால் மேற்படி இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24-year-old-died-in-kandyஇளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.