பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதான சந்தேகநபர் காவல்நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை!
காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
மிரிஜ்ஜவில துறைமுக காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சந்தேக நபர் 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரை பாலியல் வன்புணர்வு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026